ராகவேந்திர சுவாமி மகோத்சவ விழா

கிருஷ்ணகிரி, ஆக.23: கிருஷ்ணகிரி பழையபேட்டையில் உள்ள சீதாராம வீர ஆஞ்சநேய ராகவேந்திரர் சுவாமி கோயிலில், 353வது ஆராதனை மகோத்ஸவ விழா கடந்த 2 நாட்களுக்கு முன்பு துவங்கியது. இதையொட்டி, ஆஞ்சநேயர் மற்றும் ராகவேந்திரர் சுவாமிக்கு பஞ்சாமிர்த அபிஷேக, அர்ச்சனையும் நடந்தது. நேற்று, ராம நாம ஜெபம் மற்றும் தும்கூர் மருத் ஆச்சாரின் உபந்யாசம் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதே போல், கிருஷ்ணகிரி செந்தில் நகரில் உள்ள ராகவேந்திரர் கோயிலில், ஆராதனை மகோத்ஸவ விழாவையொட்டி, சுப்பரபாதம், நிர்மால்ய அபிஷேகம் நடந்தன. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Related posts

கஞ்சா விற்ற வாலிபர் கைது

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

பெரிய வெங்காயம் வரத்து குறைவு அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள்