ரவுடியை கொல்ல முயன்ற 4 வாலிபர்கள் கைது

சென்னை: புழல் பகுதியில் முன்விரோதம் காரணமாக ரவுடியை சரமாரி தாக்கி, கத்தியால் வெட்டி கொலை செய்ய முயன்ற 4 வாலிபர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். புழல் ரெட்டைமலை சீனிவாசன் தெருவை சேர்ந்தவர் ரவுடி வெங்கடேசன் (22). இவர் மீது புழல், செங்குன்றம், கீழ்ப்பாக்கம் உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் கொலைமுயற்சி, அடிதடி, வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதுதவிர, அதே பகுதியில் கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டு வரும் சிலருடன் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில், திங்கட்கிழமை இரவு  புழல், தாளமுத்து நடராஜன் தெரு வழியே ரவுடி வெங்கடேசன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, 4 பேர்  கொண்ட கும்பல் அவரை வழிமறித்து, உருட்டுக் கட்டையால் சரமாரி தாக்கி, கத்தியால் தலை மற்றும் உடல்களில் வெட்டி கொலை செய்ய முயற்சித்தது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவரவே, 4 பேரும் அங்கிருந்து தப்பித்து ஓடியது. இதில், படுகாயம் அடைந்த ரவுடி வெங்கடேசனை அக்கம்பக்கத்தினர் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பினர். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின்பேரில் புழல் போலீசார் நேற்று முன்தினம் இரவு பார்த்திபன் (எ) வெள்ளை (26), விஜயன் (எ) குள்ள விஜய் (26), வின்சென்ட் (24), வினீத் (23) ஆகியோரை கைது செய்தனர். …

Related posts

அண்ணா பல்கலைக்கு குண்டு மிரட்டல்

சிகிச்சைக்காக வந்தபோது நெருக்கம் ஏற்பட்டு உல்லாசம் தர்மபுரி ராணுவ வீரரின் மனைவியை ஆபாச படம் எடுத்து மிரட்டி கடத்தல்: மருத்துவமனைக்கு வந்த இளம்பெண்களையும் குறிவைத்து சீரழித்த ஊழியர் கைது

‘ஸ்ரீரங்கம் ஸ்டேசன்ல இருந்து வர்றேன்…’ ஓசி கடலை கேட்டு அடாவடி எஸ்.எஸ்.ஐ அதிரடி சஸ்பெண்ட்