ரயில் மோதி வாலிபர் பலி

வடமதுரை, ஆக. 8: வடமதுரை ரயில்நிலையம் அருகே நேற்று ரயில் மோதி வாலிபர் ஒருவர் இருந்து இருப்பதாக கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் ஜிஹெச்சிற்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் இறந்தவர் வடமதுரையை சேர்ந்த நவீன் குமார் (31) என்பது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி