ஊத்தங்கரை, மார்ச் 14: ஊத்தங்கரையை அடுத்த ஆனந்தூர் அருகே ரெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் மூக்கிஅம்மாள் (74). இவர் முதியோர் உதவித் தொகையை, வங்கியில் எடுப்பதற்காக கல்லாவி ரயில் நிலையம் அருகில் பாதையை கடந்து சென்றார். அப்போது, அவ்வழியாக வந்த ரயில் அவர் மீது மோதியதில், தூக்கி வீசப்பட்ட அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற சேலம் ரயில்வே போலீசார், மூதாட்டியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.