திருவள்ளூர்: மாநில கல்லூரி மாணவரை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் மேலும் ஒரு கல்லூரி மாணவன் கைது செய்யப்பட்டார். கடந்த 28ம் தேதி திருநின்றவூர் ரயில் நிலையத்தில் மாநிலக் கல்லூரி மாணவன் குமார், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக, திருவள்ளூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், மற் றொரு கல்லூரி மாணவர்கள் 8 பேர், குமாரை ராகிங் செய்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.இதையடுத்து போலீசார், சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவன் மனோஜ் (18) என்பவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். தொடர்ந்து மற்ற மாணவர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் சம்பந்தப்பட்ட கல்லூரியில் பிகாம் முதலாண்டு மாணவன் திருநின்றவூர் அடுத்த குருவாயல் கிராமத்தை சேர்ந்த ஹரிஷ் (19) என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, தலைமறைவாக உள்ள 6 மாணவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்….