ரயிலில் பயணித்த முதியவர் மயங்கி விழுந்து பலி

 

ஈரோடு,செப்.15: கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இருந்து தூத்துக்குடி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் பயணித்தார். ரயில் ஈரோடு ரயில்வே ஸ்டேஷனை நோக்கி வந்த போது, அந்த முதியவர் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து சக பயணிகள் ஈரோடு ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில், ரயில் ஈரோடு வந்ததும் ரயில்வே மருத்துவர்கள் மயங்கி விழுந்த முதியவரை பரிசோதித்த போது, அவர் இறந்தது தெரியவந்தது. இதையடுத்து இறந்த முதியவரின் உடலை மீட்டு பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை