ரயிலில் சிக்கி மயில்கள் பலி

திண்டுக்கல், ஜூலை 4: திண்டுக்கல் ரயில் நிலையம் வழியாக, தென் மாவட்டங்களுக்கு அதிக அளவில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் ஏதோ ஒரு ரயில் இன்ஜினில் சிக்கியதால் நேற்று ஆண் மற்றும் பெண் மயில் ஆகியவை இறந்த நிலையில், ரயில்வே பிளாட்பாரத்தில் கிடந்தன. இதையறிந்த ரயில்வே போலீசார் அவற்றின் உடல்களை மீட்டு, வனத்துறை காவலர் அபுபக்கர் சித்திக்கிடம் ஒப்படைத்தனர். பின்னர் வனத்துறை சார்பில் மயில்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை