ரயிலில் கஞ்சா கடத்திய உ.பி.,வாலிபர் கைது

சேலம், மார்ச் 7: சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் இயங்கும் ரயில்களில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தலை தடுக்க ஆர்பிஎப் குற்றப்பிரிவு போலீசார் தொடர் சோதனையை நடத்தி வருகின்றனர். இந்தவகையில் நேற்று, சேலம் ரயில்வே போலீசார், டெல்லி-திருவனந்தபுரம் ரயிலில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வாலிபர், ரயில் நிலையத்தில் இறங்கி சென்றார். அவரை போலீசார் நிறுத்தி சோதனையிட்டார். அதில், அவர் பையில் கஞ்சா கடத்தி வந்ததும், உத்தரபிரதேசம் மாநிலம் மதராவில் இருந்து ஒரு கிலோ ₹10 ஆயிரத்திற்கு கஞ்சாவை வாங்கி வந்ததும், பஞ்சுமிட்டாய் விற்பது போல், சிறு, சிறு பொட்டலமாக நாமக்கல்லில் கஞ்சாவை விற்க சென்றதும்தெரிந்தது. இவர் உத்தரபிரதேசம் மாநிலம் அலிவார் மாவட்டத்தை சேர்ந்த சத்தேந்திரசிங்(27) என்பது தெரிந்தது. அவரிடம் இருந்து 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார், அவரையும், கஞ்சாவையும் சேலம் மாவட்ட மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்