ராமநாதபுரம், மார்ச் 14: ராமநாதபுரத்தில் தமுமுக சார்பில் ஏழை மக்களுக்கு ரமலான் நோன்பு கால உணவு பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு தமுமுக துணை பொதுச் செயலாளர் சலிமுல்லாஹ்கான் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் இப்ராஹீம் முன்னிலை வகித்தார். மமக மாவட்ட துணை செயலாளர் காதர்பிச்சை வரவேற்றார்.
இதில் 300 குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் மதிப்பில் உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் தமுமுக,மமக கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.