ரத்த தான முகாம்

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த பையம்பாடியில்  சந்தோஷி நர்சிங் கல்லூரி செஞ்சிலுவை சங்கம் மற்றும் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் இணைந்து கல்லூரி வளாகத்தில் ரத்ததான முகாமை நடத்தின. கல்லூரி தாளாளர் காயத்ரி தேவி முகாமை தொடங்கி வைத்தார். மேலாளர் குருநாதன் முன்னிலை வகித்தார். இதில், செவிலியர் கல்லூரி முதல்வர் அபர்னா தேவி, செஞ்சிலுவை சங்க அலுவலர் பனிமலர், சந்தோஷி கலை அறிவியல் கல்லூரி முதல்வர் சண்முகம், தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் செல்வம், எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியரும் துறைத்தலைவருமான ஆறுமுகம், மருத்துவ குழுவினர் இம்முகாமில் கலந்து கொண்டனர். இதில், சந்தோஷி கல்வி குழுமத்தை சேர்ந்த சுமார் 100 மாணவ, மாணவியர் பங்கேற்று ரத்த தானம் வழங்கினர்…

Related posts

பந்தலூர் அருகே வீட்டை சூறையாடிய காட்டு யானை: வனப்பகுதிக்குள் விரட்ட கோரிக்கை

சேலம் கோட்டத்தில் ரயில்வே ஸ்டேஷன்களில் மரக்கன்றுகள் நடும் விழா

திருப்பத்தூர் அருகே மின்வேலியில் சிக்கி தந்தை, மகன் உட்பட 3 பேர் உயிரிழப்பு