மேலூர் அரசு பள்ளிக்கு கல்வி உபகரணங்கள்

 

ஊட்டி, ஜூன் 21: ஊட்டி அருகே மேலூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர் மாணவிகளுக்கு விசு கல்வி மற்றும் பொது நல அறக்கட்டளை சார்பில் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் பிரேமா தலைமை வகித்தார். அர்ஜூனன் வரவேற்று பேசினார். வட்டார கல்வி அலுவலர்கள் யசோதா, மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விசு கல்விஅறக்கட்டளை நிறுவனத்தலைவர் கைகாட்டி சுப்ரமணி கல்வி உபகரணங்கள் வழங்கினார். விழாவில், சமூக சேவகர் தமிழரசன் அறக்கட்டளை நிர்வாகிகள் ராமச்சந்திரன், சரவணன், பள்ளி ஆசிரியர்கள் சரஸ்வதி, சுமதி, சபீனா மற்றும் பெற்றோர்கள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர். ஆசிரியர் திலகவதி நன்றி கூறினார்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை