சின்னசேலம் : சின்னசேலத்தில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் வாரச்சந்தை இயங்கி வருகிறது. இந்த சந்தையில் சின்னசேலம், கள்ளக்குறிச்சி தலைவாசல் பகுதியில் இருந்து விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைவித்த காய்கறிகளை எடுத்து வந்து விற்று செல்கின்றனர். அதைப்போல பொதுமக்களும் ஆடு, மாடுகளை விற்பது, வாங்கி செல்வது என வாடிக்கையாக நடக்கிறது. கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்ட மக்கள் வருகை தரும் பெரிய வாரசந்தை இதுவாகும். தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் சுமார் 30 லட்சத்திற்குமேல் ஆடு, மாடு விற்பனை நடைபெறுகிறது.