மேற்குவங்க தேர்தலுக்குப் பிந்தைய வன்முறை: ஜனாதிபதிக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் உட்பட 150 பேர் கடிதம்..!

கொல்கத்தா: மேற்குவங்க தேர்தலுக்குப் பிந்தைய வன்முறை சம்பவங்கள் தொடர்பான வழக்குகள் தேசிய புலனாய்வு அமைப்பிடம் (என்ஐஏ) ஒப்படைக்கப்பட வேண்டும் என்று குடியரசுத் தலைருக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் உள்பட சுமார் 150 பேர் கடிதம் எழுதியுள்ளனர். மேற்குவங்காளத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. தேர்தல் முடிவு வெளியான மே 2ம் தேதிக்கு பின்னர் பல்வேறு மாவட்டங்களில் வன்முறை, கலவர சம்பவங்கள் அரங்கேறின. இதுவரை 20க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான வீடுகள் அடித்து சேதப்படுத்தப்பட்டன. இந்நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள், காவல்துறை அதிகாரிகள், அரசு அதிகாரிகள் உள்பட சுமார் 150 பேர் கடிதம் எழுதியுள்ளனர். அந்தக் கடிதத்தில், ‘மேற்குவங்கத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின்னர் நடைபெறும் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள், தனிநபர்கள் மீதான தாக்குதல்கள் குறித்து ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின்றன. அங்கு நடைபெற்று வரும் அரசியல் கொலைகள், வன்முறை சம்பவங்களுக்கு எதிராக மாநில நிர்வாகமும், காவல்துறையும் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் போதிய அளவில் இல்லை. 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வன்முறை சம்பவங்களில் பெண்கள் உள்பட பலர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 4,000 முதல் 5,000 பேர் வரை அசாம், ஜார்க்கண்ட், ஒடிசா மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இந்தச் சம்பவங்கள் நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் பண்பாட்டின் மீது நடத்தப்படும் பலமான தாக்குதலாகும். இந்தச் சம்பவங்கள் தொடா்பான வழக்குகள் தேசிய புலனாய்வு அமைப்பிடம் (என்ஐஏ) ஒப்படைக்கப்பட வேண்டும்’ என்று அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேேபால், மேற்கு வங்காளத்தில் தேர்தலுக்கு பின்னர் நடைபெற்ற வன்முறை தொடர்பாக சிறப்பு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 2,093 பெண் வழக்கறிஞர்கள் கடிதம் எழுதியுள்ளனர்….

Related posts

திருப்பதி அன்ன பிரசாதத்தில் பூரான் இருந்ததாக கூறப்படும் செய்தி முற்றிலும் தவறானது: திருமலை தேவஸ்தானம்

ஹரியானா, காஷ்மீரில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்

ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு