மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 20 ஆயிரம் கனஅடியாக சரிவு

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 20 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது. இதனால் 16 கண் மதகு மூடப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி ஒருலட்சம் கனஅடிக்கும் அதிகமாக உபரிநீர் திறக்கப்பட்டு வந்தது. தற்போது மழை குறைந்ததால் நீர்திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல் காவிரி மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்துவருகிறது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று நீர்வரத்து விநாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக இருந்த நிலையில் இன்று காலை 18 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது. இருப்பினும் அருவிகளில் தண்ணீர் கொட்டுவதால், 17வது நாளாக பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் தொடர்ந்து தடை நீடிக்கிறது.இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று காலை விநாடிக்கு 28,203 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 20 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது.காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 19,000 கனஅடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது. கடந்த 10 நாட்களுக்கு மேலாக 16 கண் மதகு வழியாக உபரிநீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது நீர்வரத்து குறைந்துள்ளதால் 16 கண் மதகு மூடப்பட்டுள்ளது….

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்