சென்னை: தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் தனியார் திருமண மண்டபம் அருகே உள்ள மரம், பலத்த காற்று வீசியதால் நேற்று சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அருகில் உள்ள மெட்ரோ ரயில் வழித்தட மின் கம்பம் மீதும் மரக்கிளை சாய்ந்ததால், உடனடியாக அவ்வழியே ரயில் சேவை நிறுத்தப்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக மரத்தை வெட்டி அகற்றினர். பின்னர், ஒரு மணி நேரத்திற்கு பிறகு, மீண்டும் அவ்வழியே ரயில் சேவை தொடங்கியது….