மூதாட்டியிடம் 7 பவுன் சங்கலி பறித்தவர் கைது

நாமக்கல், நவ.9: நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையைச் சேர்ந்தவர் கண்ணம்மாள் (70). இவர் நாமக்கல் முல்லைநகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்து விட்டு, நேற்று காலை கொல்லிமலைக்கு செல்ல நாமக்கல் பஸ் ஸ்டாண்டுக்கு சென்றார். பின்னர், பஸ்சில் ஏற முயன்ற போது, ஒருவர் கண்ணம்மாள் அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடினார். இதனால் அதிர்ச்சியடைந்த கண்ணம்மாள், திருடன் என சத்தம் போட்டு அலறவே, அங்கிருந்தவர்கள் அந்த நபரை துரத்திச்சென்று மடக்கிப்பிடித்தனர். பின்னர், அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் திருச்சி மாவட்டம் மணச்சநல்லூரை சேர்ந்த பவுல்ராஜ் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை