மூதாட்டியிடம் நகை பறிப்பு

 

கோவை, செப்.1: கோவை பீளமேடு அருகே உள்ள ஸ்ரீ நகரைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி சாந்தா (78). இவர் தனது வீட்டு முன் அமர்ந்திருந்தார். அப்போது அந்த வழியாக வாலிபர் ஒருவர் வந்தார். அவர் மூதாட்டியின் அருகே சென்று முகவரி கேட்டு பேசினார். அவர் கூறிக் கொண்டிருந்தபோது சாந்தா கழுத்தில் அணிந்திருந்த மூன்றரை பவுன் தங்க நகையை அந்த வாலிபர் பறித்து தப்பி சென்றார். இது குறித்து சாந்தா பீளமேடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து முகவரி கேட்பதுபோல நடித்து மூதாட்டியிடம் நகை பறித்து தப்பி சென்ற வாலிபரை தேடி வருகின்றனர்.

Related posts

பல்கலைக்கழக நிர்வாகம் தகவல் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில்

முன்னாள் துணை கலெக்டர் மயங்கி விழுந்து சாவு வேலூர் கலெக்டர் அலுவலகத்தில்

3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றினால் இடமாற்றம் பட்டியல் தயாரிக்க உத்தரவு பள்ளிக்கல்வித்துறையில்