கோவை, செப்.1: கோவை பீளமேடு அருகே உள்ள ஸ்ரீ நகரைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி சாந்தா (78). இவர் தனது வீட்டு முன் அமர்ந்திருந்தார். அப்போது அந்த வழியாக வாலிபர் ஒருவர் வந்தார். அவர் மூதாட்டியின் அருகே சென்று முகவரி கேட்டு பேசினார். அவர் கூறிக் கொண்டிருந்தபோது சாந்தா கழுத்தில் அணிந்திருந்த மூன்றரை பவுன் தங்க நகையை அந்த வாலிபர் பறித்து தப்பி சென்றார். இது குறித்து சாந்தா பீளமேடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து முகவரி கேட்பதுபோல நடித்து மூதாட்டியிடம் நகை பறித்து தப்பி சென்ற வாலிபரை தேடி வருகின்றனர்.