முற்றுகை போராட்டம்

பழநி, ஜூலை 24: பழநி அருகே ஆயக்குடி பேரூராட்சி 16வது வார்டில் கடந்த சில தினங்களாக சரிவர குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என தெரிகிறது. மேலும் அப்பகுதியில் உள்ள போர்வெல்களும் சரிவர வேலை செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் சிலர் நேற்று காலி குடங்களுடன் பேரூராட்சி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள், போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி முறையாக குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. அதன்பின்பே முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related posts

பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு

மணல் சிற்பத்தில் புதுவை; ஆயி மண்டபம், முதல்வர் முகம்

பெண்ணிடம் கந்துவட்டி கொடுமை வீட்டை பூட்டி வெளியேற்றிய அவலம்