மும்பையில் 23-வது மாடியில் வீட்டிலேயே இருந்த ஜிம்மின் பால்கனியில் இருந்து குதித்து ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை

மும்பை: மும்பையில் 23-வது மாடியில் வீட்டிலேயே இருந்த ஜிம்மின் பால்கனியில் இருந்து குதித்து ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை செய்து கொண்டார். மராட்டியத்தின் மும்பை நகரில் சாந்தி கமல் பகுதியில் சிஞ்ச்பொக்லி ரெயில் நிலையம் அருகே, அடுக்குமாடி குடியிருப்பில் பராஸ் பொர்வால் வயது 57 என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பிரபல ரியல் எஸ்டேட் அதிபர் ஆவார். இந்த நிலையில், இன்று காலை 6 மணியளவில் கட்டிடத்தின் 23-வது மாடியில் இருந்த பராஸ், கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதில், பலத்த காயமடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார், பராஸின் வீட்டிலேயே அமைக்கப்பட்டு இருந்த ஜிம்மில் இருந்து தற்கொலை செய்வதற்கு முன்பு, அவர் எழுதி வைத்திருந்த குறிப்பு ஒன்றை கண்டெடுத்தனர். அதில், தனது தற்கொலைக்கு வேறு யாரும் பொறுப்பு இல்லை என்றும், அதனால் யாரிடமும் விசாரணை நடத்தப்பட கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. பராஸின் உடல் கீழே கிடந்தபோது, அந்த வழியே சென்றவர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதன்பின்னரே வந்த போலீசார் உடலை கைப்பற்றி நகர மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தடயவியல் பரிசோதனையும் நடந்து வருகிறது. அவரது தற்கொலைக்கான காரணம் பற்றி விசாரணை நடந்து வருகிறது….

Related posts

சித்தூர் மாநகராட்சியில் அதிகாரிகளுடன் ஆலோசனை குடிநீர் பைப் உடைப்பு ஏற்பட்டால் உடனடியாக சீரமைக்க வேண்டும்

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் அரசு வெற்றி

உலக புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: 2வது நாளாக நடந்த தேரோட்டத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பு