முப்பெரும் விழாவில் மாணவர்களுக்கு பாராட்டு

ராமநாதபுரம், ஜூலை 18: திருப்புல்லாணி அருகே மேதலோடையில் காமராஜர் அறக்கட்டளையின் ஒன்பதாம் ஆண்டு தொடக்க விழா, காமராஜரின் பிறந்தநாள் விழா, மாணவ, மாணவியருக்குப் பாராட்டு விழா என முப்பெரும் விழா நடந்தது. விழாவிற்கு நாடார் மகாஜன சங்க அறக்கட்டளையின் தலைவர் செல்வம் தலைமை வகித்தார். செயலாளர் கிருஷ்ணன் வரவேற்றார். மகளிர் அணி நிர்வாகிகள் குத்துவிளக்கு ஏற்றினர்.

விழாவில் கிழக்கு ராமநாதபுரம் நாடார் உறவின்முறை தலைவர் பழனிச்சாமி, நாடார் மகாஜன சங்க பள்ளிகளின் முன்னாள் செயலாளர் மோகன், மாவட்ட செயலாளர் குகன் 84 கிராம நாடார் உறவின்முறை சங்க நிறுவனத் தலைவர் தங்கராஜ், தலைவர் நாகு மற்றும் ஆசிரியர்கள், மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர். விழாவில் தேர்வு செய்யப்பட்ட மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு சான்று, கேடயம், வழங்கப்பட்டது.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை