முப்பெரும் சட்டத்தை திரும்ப பெற கோரி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

 

கரூர், ஜூன் 22: முப்பெரும் சட்டத்தை திரும்ப பெற கோரி கரூரில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். முப்பெரும் சட்டங்களின் பெயர்களை இந்தி மற்றும் சமஸ்கிருதத்தில் மாற்றியுள்ளதையும், சட்டத்தை அமல்படுத்தும் முடிவை திரும்ப பெற வலியுறுத்தியும், வழக்கறிஞர்களுககு எதிராக நடத்தப்படும் தாக்குதல்களை கண்டித்தும் நேற்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில், கரூர், அரவக்குறிச்சி, குளித்தலை, மாயனூர் ஆகிய பகுதிகளில் நேற்று காலை முதல் மாலை வரை 700க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை