முத்துப்பேட்டை வட்டாரத்தில் விட்டு விட்டு தூறல் மழை

முத்துப்பேட்டை: முத்துப்பேட்டை வட்டாரத்தில் விட்டு விட்டு தூறல் மழை பெய்தது. இதனால் வெப்பம் குறைந்து குளிர்காற்று வீசியது. முத்துப்பேட்டை பகுதியில் சமீப காலமாக கடும் வெயில் மற்றும் கோடை வெப்பம் அதிக அளவில் காணப்பட்டது. இதனால் மக்கள் பல்வேறு வகையில் சிரமத்துக்குள்ளாகினர். மேலும் விவசாயிகள் உழுது வைத்திருந்த வயலில் நெல் தெளிக்க முடியாமல் இருந்தனர். இந்த நிலையில் மக்களுக்கும் விவசாயிகளும் மகிழ்ச்சி தரும் வகையில் நேற்று காலை முதல் மாலை வரை குளிர்ந்த காற்றுடன் மேகமூட்டம் காணப்பட்டது. இடையிடையே மழை தூறல்கள் போட்டது. இரவிலும் இடையிடையே தூறல்கள் விழுந்தது. இதனால் வெப்பம் குறைந்து குளி்ர் காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related posts

15 ஆண்டுகளை கடந்த அரசு வாகனங்கள் பதிவுச்சான்று புதுப்பிப்பு ஓராண்டு நீட்டிப்பு தமிழக அரசு உத்தரவு

ஒருமுறை பயன்படுத்திய 76 ஆயிரம் லிட்டர் சமையல் எண்ணெய் பயோ டீசலாக மாற்றம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தகவல்

பெண் டாக்டரிடம் ₹1 லட்சம் மோசடி பேர்ணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் பார்சலில் தடை செய்யப்பட்டுள்ள பொருள் அனுப்பியதாக கூறி