முத்துப்பேட்டை அருகே வீரன்வயலில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

 

முத்துப்பேட்டை,நவ.25: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த வீரன்வயல் கிராமத்தில் கிராமத்தில் தேசிய கால்நடை நோய் கட்டுப்படுத்தும் திட்டத்தின் மூலம் திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாரூ உத்தரவின் பேரில் கால்நடை பாரமரிப்புத் துறை இணை இயக்குனர் ஹமீது அலி, உதவி இயக்குனர் ராமலிங்கம் வழிகாட்டுதலின்படி கோமாரி நோய் தடுப்பு+சி முகாம் நடைபெற்றது. முகாமை ஊராட்சி மன்ற தலைவர் லதா பாலமுருகன் துவக்கி வைத்தார்.

முகாமில் 600க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி இலவசமாக போடப்பட்டது. முகாமில் டாக்டர் மகேந்திரன் தலைமையிலான மருத்துவகுழுவில் இடும்பாவனம் டாக்டர் மகேந்திரன், கால்நடை ஆய்வாளர்கள் ஜெகநாதன், முருகேஷ், நிர்மலா, கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் வீரமணி, மகாலட்சுமி, மாதவன், பிரசன்னா ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்தினர்.

Related posts

காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து காவலர்களுடன் இணைந்து விபத்து, வாகன நெரிசலை குறைக்க உதவும் சட்டம் – ஒழுங்கு போலீசார்:  குற்ற சம்பவங்களும் குறைந்தது  வாகன ஓட்டிகள் பாராட்டு

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பிளாஸ்டிக் பைகள் சப்ளை செய்தவர் வீட்டுக்கு சீல்: உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை

மலேசியாவுக்கு கடத்த முயன்ற 160 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்: சென்னை பயணி கைது