முதுநிலை பாடபிரிவுகளுக்கு இன்று சேர்க்கை கலந்தாய்வு

 

தர்மபுரி, ஆக.19: தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் அனைத்து முதுநிலை பாடபிரிவுகளுக்கும் இன்று (19ம் தேதி) மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடக்கிறது. தர்மபுரி அரசு கலைக்கல்லூரி முதல்வர் கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:  தர்மபுரி அரசு கலைக்கல்லூரி 2024-2025ம் ஆண்டிற்கான முதுநிலைப் பட்டமேற்படிப்பிற்கான சேர்க்கை கலந்தாய்வு, இன்று (19ம் தேதி) அனைத்து முதுநிலைபாட பிரிவுகளுக்கும் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற உள்ளது.

இதில் விண்ணப்பித்த அனைவரும் பங்கேற்கலாம். மாணவர் சேர்க்கையின்போது சிறப்புபிரிவின் கீழ் சேர்க்கைக்கு வரும் மாணவர்கள், தங்களுடைய சிறப்பு பிரிவு அசல் சான்றிதழை கட்டாயம் கொண்டு வரவேண்டும். மேலும் சேர்க்கையின் போது, மாணவர்கள் விண்ணப்பப்படிவம், அசல் மாற்றுச்சான்றிதழ், அசல் பிளஸ்1 மற்றும் பிளஸ்2 மதிப்பெண் பட்டியல், தற்காலிக பட்ட சான்று, தொகுப்பு மதிப்பெண் சான்று, ஜாதிச்சான்றிதழ் அசல் மற்றும் நகல், ஆதார் அட்டை அசல் மற்றும் நகல், வங்கிக் கணக்குப் புத்தகம் நகல், போட்டக்கள் (பாஸ்போர்ட் அளவு) ஆகிய ஆவணங்களின் நகல்கள் கொண்டு வரவேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்