முதுகுளத்தூரில் கடைக்குள் புகுந்த கார்

சாயல்குடி, ஜூன் 18: தென்காசி என்.சி.ஓ காலனியை சேர்ந்தவர் செந்தில்குமார்(45). இவர் பரமக்குடி பகுதியிலுள்ள குலதெய்வம் கும்பிடுவதற்காக நேற்று முன்தினம் இரவு தென்காசியிலிருந்து புறப்பட்டு பரமக்குடிக்கு மனைவி, ஒரு குழந்தை என குடும்பத்துடன் காரில் வந்துள்ளார்.நேற்று அதிகாலையில் முதுகுளத்தூர் பஜாரில் கார் வந்தபோது செந்தில்குமாருக்கு தூக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் தேரிருவேலி விலக்கு சாலையோரம் இருந்த டீக்கடை சுவரில் மோதியது. இந்த விபத்தில் கார் டயர் வெடித்தது, டீக்கடை சுவரின் பக்கவாடு சேதமடைந்தது. இந்த விபத்தில் செந்தில்குமார் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டது. இந்தநிலையில் இரவு நேர ரோந்து பணியில் இருந்த முதுகுளத்தூர் போலீசார் அவர்களை மீட்டு முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்து, பரமக்குடி குலதெய்வ கோயிலுக்கு அனுப்பி வைத்தனர். அதிகாலை நேரம் என்பதால் பொதுமக்கள், டீக்கடை பணியாளர்கள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து குறித்து முதுகுளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

நிலக்கடலையில் கூடுதல் மகசூல் வேளாண்துறையினர் அட்வைஸ்

திருத்தங்கல்லில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் 5 பேர் கைது

பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகளுக்கு ஆபத்து