முதியவர் சடலம் யார் அவர்? விசாரணை

செய்துங்கநல்லூர், செப். 21: வல்லநாடு அருகே தூத்துக்குடி-நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார். அவர் கட்டம் போட்ட சட்டை மற்றும் கருப்பு பேண்ட் அணிந்த நிலையில் இறந்து கிடந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற முறப்பநாடு போலீசார், முதியவர் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ரமேஷ் மோகன் வழக்கு பதிந்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி