முதியவரிடம் ரூ.1 லட்சம் திருடிய வாலிபர் கைது

திருவில்லிபுத்தூர், ஜன.23: முதியவரிடம் ரூ.1 லட்சம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருவில்லிபுத்தூர் அருகே உள்ள முத்துக்குமாரபுரம் பகுதியை சேர்ந்தவர் சண்முகவேல்(70). இவர் அந்த பகுதியில் உள்ள மோட்டார் அறை ஒன்றில் தங்கியுள்ளார். இந்நிலையில் இவர் வெளியே சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் அறை பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சண்முகவேல் உள்ளே சென்று பார்த்தபோது அவர் வைத்திருந்த ரூ.ஒரு லட்சம் பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து சண்முகவேல் நத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். திருட்டு தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய நத்தம்பட்டி போலீசார் பணத்தை திருடியதாக இலந்தைகுளம் பகுதியைச் சேர்ந்த செல்லமுத்து(22( என்பவரை கைது செய்தனர்.

Related posts

பல்கலைக்கழக நிர்வாகம் தகவல் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில்

முன்னாள் துணை கலெக்டர் மயங்கி விழுந்து சாவு வேலூர் கலெக்டர் அலுவலகத்தில்

3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றினால் இடமாற்றம் பட்டியல் தயாரிக்க உத்தரவு பள்ளிக்கல்வித்துறையில்