முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு மதிய உணவு, சீருடை வழங்கல்

சாத்தான்குளம், மார்ச் 1: திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் செட்டிவிளையில் உள்ள குழந்தை இயேசு கருணை இல்லத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு மதிய உணவு மற்றும் சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஒன்றிய செயலாளர் பாலமுருகன் தலைமை வகித்து சீருடை மற்றும் மதிய உணவை வழங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் இந்திரகாசி,அவைத்தலைவர் ராஜபாண்டியன், பொருளாளர் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட பிரதிநிதிகள் சித்திரை, சந்தியா, மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி துணை அமைப்பாளர் ரனிஷ், சாஸ்தாவிநல்லூர் ஊராட்சி தலைவர் திருக்கல்யாணி, இளைஞரணி துணை அமைப்பாளர் தேவதாஸ், மாணவரணி துணை அமைப்பாளர் கவுசிக், கிளை செயலார்கள் தர்மலிங்கம், பண்டாரம், அமிர்தராஜ், ஜாகீர்உசேன், கிருஷ்ணன், அப்துல்ரகுமான், செல்வசந்திரன், மோகன், சித்திரை, மகேந்திரன், அலெக்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

விளையாட்டு மைதானத்தில் குப்பை, கட்டிட கழிவு கொட்டுவதற்கு எதிர்ப்பு: இளைஞர்கள் சாலை மறியல்

ஊராட்சி தலைவர் வீட்டில் கல்வீச்சு 20 பேர் மீது வழக்கு

பிளஸ் 2 படித்துவிட்டு கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் கைது: சுகாதாரத்துறை நடவடிக்கை