முதல்வர் பங்கேற்கும் விழாவில் திமுகவினர் திரளாக பங்கேற்க வேண்டும் மதுராசெந்தில் அழைப்பு

திருச்செங்கோடு, அக்.22: நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், மண்டல நகரமைப்பு திட்டக்குழு உறுப்பினருமான மதுராசெந்தில் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாமக்கல் பொம்மைகுட்டைமேட்டில், இன்று(22ம்தேதி) அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கவும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும், முடிவடைந்த திட்டங்களை திறந்து வைக்கவும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தருகிறார். இந்நிகழ்ச்சிகளில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், வார்டு, கிளை நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related posts

சட்டப்பேரவை குழு விருதுநகரில் இன்று ஆய்வு

நரிக்குடி அருகே ரேஷன் பொருட்கள் வாங்க கண்மாய் நீரை கடந்து செல்லும் கிராமமக்கள்: ஊரில் புதிய கடை திறக்கப்படுமா?

சிவகாசியில் மாநில அளவிலான கராத்தே போட்டி