பாப்பாக்குடி : முக்கூடல் அருகே ஓடைக்கரை துலுக்கப்பட்டியில் உள்ள ஜெயராம் என்பவரின் விவசாய தோட்டத்தில் சுமார் 7அடி நீள மலைப்பாம்பு கிடந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் சேரன்மகாதேவி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சேரன்மகாதேவி நிலைய அலுவலர் வரதராஜன் மற்றும் வீரர்கள் சுரேஷ் குமார், செந்தில் பாபு ராமச்சந்திரன், முருகன் சந்திரகுமார் மணிகண்டன் ஆகியோர் விரைந்து வந்து மலைப்பாம்பை பிடித்தனர். பின்னர் மலைப்பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது….