முகக்கவசம் அணியாத 993 பேர் மீது வழக்கு

சென்னை: சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற வாகன சோதனையில், கொரோனா ஊரடங்கு தடையை மீறியது தொடர்பாக 215 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றியதாக 280 இருசக்கர வாகனங்கள் மற்றும் 9 ஆட்டோக்கள் என மொத்தம் 289 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், முகக்கவசம் அணியாமல் சென்றது தொடர்பாக 993 பேர் மீதும், சமூக இடைவெளி கடைபிடிக்காதது தொடர்பாக 13 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தமிழக அரசின் ஊரடங்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடித்து கொரோனா தொற்றை தடுக்க ஒத்துழைக்க வேண்டும், என போலீசார் வலியுறுத்தி உள்ளனர்….

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்