சென்னை : திருவல்லிக்கேணி ஜானி ஜானிகான் தெருவை சேர்ந்தவர் அமீது(25), மீன் வியாபாரி. நேற்று முன்தினம் ரூ3.50 லட்சத்தை அண்ணா சாலையில் உள்ள தனியார் வங்கியின் ஏடிஎம் மையத்தில் டெபாசிட் இயந்திரத்தில் பணத்தை செலுத்த தனது பைக்கில் வந்தார். அப்போது பணத்தை செலுத்த முயன்றபோது, இயந்திரம் வேலை செய்யவில்லை. இதனால் ராயப்பேட்டையில் உள்ள ஏடிஎம் மையத்திற்கு தனது பைக்கில் சென்றார். ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலை சந்திப்பு அருகே சென்றபோது, பின்னால் பைக்கில் வந்த 2 பேர் அவரை வழிமறித்து கண்மூடித்தனமாக தாக்கி அவர் பையில் வைத்திருந்த ₹3.50 லட்சத்தை பறித்து தப்பினர். புகாரின்பேரில் அண்ணா சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று விசாரிக்கின்றனர். …