மீன் கடை கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது

 

பல்லடம், மார்ச் 20: திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே சேடபாளையம் பகுதியில் பாண்டியன் என்பவர் மீன் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த கடைக்கு நேற்று முன்தினம் மீன் வாங்க வந்த ஒருவர் மீனை குறைந்த விலைக்கு கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு பாண்டியன் மறுக்கவே அந்த நபர் மீன் கடை கண்ணாடியை உடைத்து ரகளை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டார்.

இதுகுறித்து பல்லடம் போலீஸ் நிலையத்தில் மீன் கடை உரிமையாளர் பாண்டியன் புகார் அளித்தார். அதன் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை செய்து மீன் கடையில் கண்ணாடியை உடைத்து ரகளை செய்த அருள்புரத்தை சேர்ந்த வினோத்குமார் (28) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை