மீன்பாசி குத்தகைக்கு கருத்துரு அனுப்ப வேண்டும்: அதிகாரிகளுக்கு மீன்வளத்துறை ஆணையம் உத்தரவு

சென்னை: மதுரை உயர் நீதிமன்ற தீர்ப்பாணையின்படி, மீன்பாசி குத்தகைக்கு பற்றிய கருத்துருக்களை தலைமையகத்துக்கு அனுப்ப வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மீன்வளத்துறை  ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த சுற்றறிக்கை: கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை அரசாணையில் திருத்தம் மேற்கொள்ள வேண்டியுள்ளதால் உரிய திருத்தங்களை பரிந்துரைத்து கருத்துருவை, அரசுக்கு அனுப்பிட ஏதுவாக மேற்படி பொதுப் பணித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை, வருவாய் துறைக்கு சொந்தமான குளங்களை நீதிமன்ற தீர்ப்பாணையின்படி மீன்பாசி குத்தகை நடவடிக்கை மேற்கொள்ள கருத்துருவினை சென்னை, நாகப்பட்டினம், தூத்துக்குடி ஆகிய மாவட்டத்தில் உள்ள மீன்துறை இணை இயக்குநர்கள், கடலூர், தருமபுரி, மதுரை, ராமநாதபுரம், பவானிசாகர், திருச்சி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள மீன்துறை துணை இயக்குநர்கள் அனுப்ப வேண்டும்….

Related posts

காவல் நிலையத்தில் கழுத்தை அறுத்துக்கொண்டு ரவுடி தற்கொலை முயற்சி

டாஸ்மாக் கடைகளில் 8 மணிநேர வேலை அமல்படுத்த ஷிப்ட் முறை வருகை பதிவேடு: பணியாளர் சங்க செயற்குழு வலியுறுத்தல்

கோயம்பேடு மார்க்கெட் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்