ஆவடி: திருமுல்லைவாயல் புதிய அண்ணா நகர், நேரு தெருவை சேர்ந்தவர் நந்தகுமார்(32). மீன்வியாபாரி. அம்பத்தூர் ஏரிக்கரையில் வலைவீசி மீன் பிடித்து வியாபாரம் செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலை நந்தக்குமார் மீன்பிடிக்க ஏரிக்கு சென்றார். இரவு வரை வீடு திரும்பவில்லை. உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். இந்நிலையில், நேற்று மதியம் நந்தகுமாரின் சடலம் அம்பத்தூர் ஏரிக்கரையில் மிதந்துகொண்டிருந்தது. தகவலறிந்த திருமுல்லைவாயல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். புகாரின்படி இன்ஸ்பெக்டர் ஆனந்த் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில் நந்தகுமாருக்கு வலிப்பு நோய் இருந்துள்ளது. மீன் பிடித்தபோது வலிப்பு ஏற்பட்டு தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்….