மீண்டும் தலைதூக்கும் ஆட்டோ ரேஸ்!: சென்னை மதுரவாயல் உள்வட்ட சாலையில் ஆட்டோ ரேஸில் ஈடுப்பட்ட 4 பேர் கைது..!!

சென்னை: சென்னை மதுரவாயல் தாம்பரம் உள்வட்ட சாலையில் ஆட்டோ ரேசில் ஈடுப்பட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக அமைக்கப்பட்டுள்ள மதுரவாயல் தாம்பரம் உள்வட்ட சாலையில் மீண்டும் ஆட்டோ ரேஸ் தலையெடுத்துள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் இச்சாலைகளை முற்றுகையிட்டு நடத்தப்படும் ஆட்டோ ரேஸ்களால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். வார இறுதி நாளான நேற்று காலை நடந்த ஆட்டோ ரேஸில் பங்கேற்க ஆட்டோக்கள் அதிவேகத்தில் சென்றது பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. 120 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் அளவுக்கு எஞ்சினில் மாற்றம் செய்யப்பட்டு ஆட்டோக்கள் பந்தயத்தில் ஈடுபடுவதால் வாகன ஓட்டிகள் அலறி அடித்து ஓடும் நிலை உள்ளது. இந்த நிலையில் மதுரவாயல் தாம்பரம் உள்வட்ட சாலையில் ஆட்டோ ரேஸில் ஈடுப்பட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த மகேஷ், ராமபுரத்தை சேர்ந்த ஸ்ரீனிவாசன், ஸ்ரீதர், சின்னய்யா ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். ஆட்டோ ரேஸுக்கு பயன்படுத்திய ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், தலைமறைவானவர்களை தேடி வருகின்றனர். …

Related posts

‘ஜீரோ விபத்து நாள்’ இலக்கு வெற்றியடைய மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் வேண்டுகோள்

மணப்பாக்கம் பகுதியில் குளத்தை ஆக்கிரமித்து கட்டிய 9 குடியிருப்புகள் அகற்றம்: நீதிமன்ற உத்தரவால் மாநகராட்சி நடவடிக்கை

சினிமா உதவி எடிட்டர் மயங்கி விழுந்து பலி