மீஞ்சூர் அருகே ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை

 

பொன்னேரி: மீஞ்சூர் அடுத்த பழைய நாப்பாளையம் 15வது வார்டு பகுதியில் ரேஷன் கடை வசதி இல்லாததால் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர். இது சம்பந்தமாக துரை சந்திரசேகர் எம்எல்ஏவை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். இதனையடுத்து, பொன்னேரி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து ரேஷன் கடை கட்ட நேற்று பூமி பூஜை நடத்தப்பட்டது.

இதில், கலந்துகொண்ட பொன்னேரி தொகுதி எம்எல்ஏ துரை சந்திரசேகர் பூமி பூஜையை தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில், பகுதி செயலாளர் நாராயணன், வட்ட செயலாளர் அங்குசாமி, மாநகராட்சி கவுன்சிலர் நந்தினி சண்முகம், மாவட்ட பொதுச் செயலாளர் ஜெய் பிரசாத், வட்ட தலைவர் காமேஷ், மாவட்ட செயலாளர் கிருபாகரன், அத்திப்பட்டு புருசோத்தமன் உள்ளிட்ட திமுக காங்கிரஸ் நிர்வாகிகள், பொதுமக்கள், அரசுத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Related posts

விழுப்புரம் அருகே பரபரப்பு திருமணமான 4 மாதத்தில் விவாகரத்து வரன் பார்த்தவருக்கு சரமாரி அடி உதை மாப்பிள்ளை மீது போலீஸ் வழக்குப்பதிவு

டாஸ்மாக் கடையை உடைத்து பணம், மது பாட்டில்கள் கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை

மீனவர்கள் தொடர்ந்து சிறை பிடிப்பதை தடுக்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் நாராயணசாமி பரபரப்பு பேட்டி