மிலாடிநபி, காந்திஜெயந்தியை முன்னிட்டு செப்.28, அக்.2ல் டாஸ்மாக் கடைகள் மூடல்

தென்காசி, செப்.23: மிலாடி நபியை முன்னிட்டு செப்டம்பர் 28ம் தேதியும், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2ம் தேதியும் தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக்கடைகள் மூடப்பட்டிருக்கும் என்று கலெக்டர் துரை ரவிச்சந்திரன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: வருகிற 28ம் தேதி (வியாழன்) மிலாடி நபியை முன்னிட்டும், அக்டோபர் 2ம் தேதி (திங்கள்) காந்தி ஜெயந்தியை முன்னிட்டும் தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மதுபானக்கடைகள், அதனுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் மற்றும் தங்கும் விடுதியுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் மேற்கண்ட 2 தினங்களில் மட்டும் மூடப்பட்டிருக்கும்.

Related posts

15 ஆண்டுகளை கடந்த அரசு வாகனங்கள் பதிவுச்சான்று புதுப்பிப்பு ஓராண்டு நீட்டிப்பு தமிழக அரசு உத்தரவு

ஒருமுறை பயன்படுத்திய 76 ஆயிரம் லிட்டர் சமையல் எண்ணெய் பயோ டீசலாக மாற்றம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தகவல்

பெண் டாக்டரிடம் ₹1 லட்சம் மோசடி பேர்ணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் பார்சலில் தடை செய்யப்பட்டுள்ள பொருள் அனுப்பியதாக கூறி