மின் மோட்டார் திருடிய 2 பேர் கைது

அரூர், ஜூன் 29: மொரப்பூர் அருகே உள்ள கருத்தாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (38). இவருக்கு சொந்தமான லாரியை, அதே பகுதியில் உள்ள தோட்டத்தில் கடந்த புதன்கிழமை நிறுத்தியிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத 2 பேர், லாரியில் இருந்த ஜாக்கி, லிவர், ஸ்பேனர் மற்றும் தோட்டத்தில் இருந்த மின் மோட்டாரை ஆகியவற்றை திருடினர். இதைப்பார்த்த ராஜ்குமார் திருடன் என கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து, 2 பேரையும் மடக்கிப் பிடித்தனர். பின்னர், அவர்களை மொரப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் ஜி.மூக்கனூர்பட்டியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி(29), பாலகிருஷ்ணன்(48) என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்தனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை