இளம்பிள்ளை, செப்.13: சேலம் தெற்கு கோட்டம் சார்பாக, மின் சிக்கனம் மற்றும் மின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம் அரியானூரில் நடைபெற்றது. ஈரோடு மண்டல தலைமை பொறியாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். செயற் பொறியாளர் அன்பரசன் முன்னிலை வகித்தார். இதில் சேலம் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் புஷ்பலதா சிறப்புரை ஆற்றினார். இதில் தெற்கு கோட்டத்தை சார்ந்த உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் மற்றும் அனைத்து பணியாளர்கள் கலந்து கொண்டனர்.