மின்வாரிய கேங்மேன் தொழிலாளர்களை சொந்த மாவட்டத்தில் பணியாற்ற அனுமதிக்க பிரேமலதா கோரிக்கை

 

சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வெயிட்ட அறிக்கை: தமிழ்நாடு மின்வாரியத்தில் 2021ம் ஆண்டு ஒப்பந்த பணியாளர்கள் மற்றும் சில தொழிலாளர்கள் தகுதித் தேர்வு வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டு 9,613 நபர்கள் கேங்மேன் தொழிலாளர்களாக பணி அமர்த்தப்பட்டனர். இப்படி தேர்வு செய்யப்பட்ட தொழிலாளர்களை அந்தந்த மாவட்டத்தில் நியமனம் செய்யாமல் 300 கிமீ தொலைவுக்கு அப்பால் உள்ள மாவட்டங்களில் பணி அமர்த்தினார்கள்.

இதனால் கேங்மேன் தொழிலாளர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். எனவே கேங்மேன் தொழிலாளர்களை கள உதவியாளராக அறிவித்து அவர்களுக்குரிய பணியை செய்ய அரசு வழிவகை செய்ய வேண்டும். மேலும் கேங்மேன் தொழிலாளர்களை அவரவர் சொந்த மாவட்டத்தில் பணிபுரிவதற்கான அரசாணையையும் உடனே வெளியிட வேண்டும்.

Related posts

திருத்தணி அருகே தூய்மை சேவை விழிப்புணர்வு நிகழ்ச்சி: கலெக்டர் தொடங்கி வைத்தார்

மக்கள்குறைதீர் கூட்டத்தில் .50 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்: ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வழங்கினார்

பெரியபாளையம் அருகே ஆரணியாற்றில் அத்துமீறல் தொடர் மணல் கொள்ளையால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு: தனியார் நிறுவனம் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு