மின்மோட்டார் திருட்டு

 

ஆண்டிபட்டி, செப். 23: தேனி அருகே வீரப்ப அய்யனார் கோயில் சன்னதி தெரு பகுதியை சேர்ந்தவர் கோபால் ராஜா(53). அல்லிநகரம் குவாரி சாலையில் உள்ள கோபால் ராஜாவுக்கு சொந்தமான தோட்டத்தில் மின் மோட்டார் மூலம் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 19ம் தேதி மின் மோட்டாரை அடையாளம் தெரியாத நபர்கள் திருடி சென்றதாக கூறப்படுகிறது. இதனால் நேற்று முன்தினம் கோபால் ராஜா அல்லிநகரம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

சீர் மரபினர் நல வாரியம் உறுப்பினராக சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திசையன்விளையில் மின்னொளி கைப்பந்து போட்டி