நாகர்கோவில் : கன்னியாகுமரி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் பத்மகுமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்கள் தங்கள் பகுதியில் ஏற்படும் மின்தடை மற்றும் பாதுகாப்பற்ற நிலையிலுள்ள பழுதான மின் கம்பங்கள், தாழ்வாக இருக்கும் மின் கம்பிகள், மின்விபத்து மற்றும் பாதுகாப்பற்ற நிலையிலுள்ள மின் பகிர்வுகளை தெரிவிக்க 24 மணி நேரமும் இயங்கும் கட்டணமில்லா மின்தடை நீக்க மையம் செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் 24 மணிநேரமும் இயங்கும் மின்நுகர்வோர் சேவை மையம் மின்னகம் 9498794987 எண்ணிற்கும் மற்றும் கட்டணமில்லா மின்தடை நீக்க மையத் தொலைபேசி எண் 1912 எண்ணிற்கும் தொடர்பு கொண்டு, தங்களுடைய மின்தடை நீக்க சம்பந்தமான புகார்களைப் பதிவு செய்யலாம். சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலரை தொடர்பு கொண்டும் புகார்களை பதிவு செய்யலாம். அவ்வாறு பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் அழைப்புகள், புகார்கள் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலர்கள் மற்றும் களப்பணியாளர்களிடம் தெரிவிக்கப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. …