மின்னல் தாக்கியதில் 3 விவசாயி பலி

கமுதி: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று மாலை திடீரென பலத்த மழை பெய்தது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே முனியனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல்(50). இவர் நேற்று மாலை வயல் பகுதியில் ஆடு  மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பழனிவேல் உயிரிழந்தார். இதேபோல் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள மேட்டுசோழந்தூரை சேர்ந்த குஞ்சரம் (48) நேற்று வயலுக்கு சென்றபோது, மின்னல் தாக்கி உயிரிழந்தார். மருதூரை சேர்ந்த முருகன்(43) நேற்று மாலை ஆடு மேய்த்துவிட்டு வீட்டிற்கு  திரும்பி  கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி உயிரிழந்தார்….

Related posts

அமைச்சர் சேகர்பாபு தலைமையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை

தமிழ்நாடு பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு தீர்மானத்திற்கு ஒப்புதல் தர வேண்டும்: திமுக எம்.பி. ராஜேஷ்குமார் வலியுறுத்தல்

கள்ளக்குறிச்சி விஷசாராய மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் 4 முக்கிய பணிகள்: அரசிதழில் வெளியீடு