கமுதி: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று மாலை திடீரென பலத்த மழை பெய்தது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே முனியனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல்(50). இவர் நேற்று மாலை வயல் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பழனிவேல் உயிரிழந்தார். இதேபோல் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள மேட்டுசோழந்தூரை சேர்ந்த குஞ்சரம் (48) நேற்று வயலுக்கு சென்றபோது, மின்னல் தாக்கி உயிரிழந்தார். மருதூரை சேர்ந்த முருகன்(43) நேற்று மாலை ஆடு மேய்த்துவிட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி உயிரிழந்தார்….