மின்சாரம் பாய்ந்து மாணவன் பலி

ஆலந்தூர்: கிண்டி ஈக்காட்டுதாங்கல் கங்கையம்மன் தெருவை சேர்ந்தவர் சண்முகம். ஆட்டோ டிரைவர். இவரது மகன் மதன்(11). அங்குள்ள அரசு பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மதன் தனது  நண்பர்களுடன் ஈக்காட்டுதாங்கல்  மாந்தோப்பு பகுதியில் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது அங்குள்ள மதில் சுவர் மீது ஏறி மாமரக்கிளையில் தொங்கிக்கொண்டிருந்த மாங்காயை பறிக்க முயன்றான். அப்போது அங்கிருந்த  டிரான்ஸ்பார்மர் மீது அவனது கை பட்டதில்  அவன் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டான். இதில் சம்பவ இடத்திலேயே மதன் பரிதாபமாக இறந்தான்….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை