மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

கிருஷ்ணகிரி, ஆக.2: கிருஷ்ணகிரி, அடுத்த பெத்தனப்பள்ளி மதன்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணப்பன் (68). இவர் அதே பகுதியில் உள்ள செங்கல் சூளையில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் மாலை, பணியில் இருந்த போது, அங்கிருந்த இரும்பு கதவை கிருஷ்ணப்பன் திறக்க முயன்றார். அப்போது திடீரென மின்சாரம் பாய்ந்து, அவர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த டவுன் போலீசார், அவரது சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். அதில், இரும்பு கதவின் மீது மின் ஒயர் அறுந்து கிடந்ததும், அதனை அறியாமல் கதவை கிருஷ்ணப்பன் திறக்க முயன்றபோது, அவர் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது தெரிந்தது. இதையடுத்து அவரது சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி