மின்சாரம் தாக்கி பெண் படுகாயம்

சோழவந்தான், ஜூன் 2: சோழவந்தான் அருகே இரும்பாடி ஊராட்சி பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த தவமணி மனைவி மாரியம்மாள்(50). நேற்று ஊர் அருகே கொடிக்கால் பகுதிக்கு இவர் கூலி வேலைக்கு சென்று உள்ளார். அப்போது மேலே தாழ்வாக சென்ற உயர் அழுத்த மின் வயரிலிருந்து, மரம் வழியாக மின்சாரம் பாய்ந்ததில் மாரியம்மாள் பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை முடிந்து, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சோழவந்தான் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை