மின்சாரம் தாக்கி கூலித்தொழிலாளி பலி

கரூர்: மின்சாரம் தாக்கி கூலித்தொழிலாளி பலியானார். திருச்சி மாவட்டம் தொட்டியத்தை சேர்ந்தவர் சதாசிவம் (39). இவர், கரூர் மதுரை பைபாஸ் சாலையோரம் உள்ள ஒரு வாட்டர் சர்வீஸ் நிலையத்தில் சர்வீஸ் மேனாக பணியாற்றி வந்தார். இதே பகுதியில் குடும்பத்துடன் குடியிருந்து வந்தார். இந்நிலையில், கடந்த 5ம்தேதி, வாட்டர் சர்வீஸ் பணியில் ஈடுபட்டிருந்த போது, பம்ப்பில் இருந்து மின்சார கசிவு ஏற்பட்டு, சதாசிவத்தை து£க்கி எரிந்தது. இதில், படுகாயமடைந்த சதாசிவம் ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கருர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்த போது, சிகிச்சை பலனின்றி இறந்தார்.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை