மினி லாரி கவிழ்ந்து 2 பேர் படுகாயம்

ராசிபுரம், ஜூலை 20: நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் இருந்து 1 டன் அன்னாசி பழம் ஏற்றிக்கொண்டு, தர்மபுரி நோக்கி மினி லாரி சென்று கொண்டிருந்தது. ராசிபுரம் அடுத்த தேங்கல்பாளையம் பிரிவு சாலை அருகே வந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினிலாரி, தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதில் டிரைவர் ஆதிமூலம் மற்றும் அவருடன் இருந்த நவீன் ஆகியோர் காயம் அடைந்தனர். மேலும் வாகனத்தில் இருந்த அன்னாசி பழங்கள் சாலையோரத்தில் சிதறின. அருகில் இருந்தவர்கள், இருவரையும் மீட்டு, சிகிச்சைக்கு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த வெண்ணந்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, போக்குவரத்தை சரி செய்தனர். முதற்கட்ட விசாரணையில், நாய் குறுக்கே வந்ததால் விபத்து நடந்தது தெரியவந்தது.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி