மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் திமுகவில் இணைந்தனர்

கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில்  கும்மிடிப்பூண்டி   ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜி.ஆர்.கண்டிகை  மற்றும் பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட போந்தவாக்கம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பாமக, அதிமுக, தேமுதிக  உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த  300க்கும் மேற்பட்டோர் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். பின்னர் டி.ஜெ.கோவிந்தராஜன் பேசுகையில், “தமிழகத்தில் அடுத்து  திமுக ஆட்சி வரும். அதில்  மக்களுக்கான நல்ல திட்டங்களை கொண்டுவரப்படும். வரும் தேர்தலில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டியில் திமுக மகத்தான வெற்றி பெறுவது நிச்சயம்” என்றார். இந்நிகழ்ச்சியில், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெ.மூர்த்தி, கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வழக்கறிஞர் மணிபாலன், எல்லாபுரம் ஒன்றியச்செயலாளர் சக்திவேல், ஜி.ஆர்.கண்டிகை திமுக பிரமுகர் ராஜேஷ் உள்பட பலர் பங்கேற்றனர். …

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்